எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-10-15 08:08 GMT
நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சோலார் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. மேலும், மின்கம்பமும் துருபிடித்தும், செடி,கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, துருபிடித்த கம்பத்தையும், பழுதடைந்த மின்விளக்குகளையும் அகற்றி விட்டு புதிய மின்கம்பம், விளக்குகளையும் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்