சீரமைக்கப்பட்டது

Update: 2023-10-11 07:58 GMT

நாகர்கோவில் சற்குணவீதி வறீது தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால், அந்த பகுதியில் இருள்சூழ்ந்து காணப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை சீரமைத்து பொருத்தி எரியவைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-பாவுஸ்டின், வறீதுதெரு, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்