சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-08 08:22 GMT

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வடசேரி போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இழந்தையடி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்