எரியாத மின் விளக்குகள்

Update: 2023-10-01 11:26 GMT

அரியலூர்- ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் அரியலூர் சந்தை பேட்டைக்கு தென் புறத்தில் ஒரே வளாகத்தில் பல்துறை அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம் இன்னும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இங்குள்ள அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நுழைவாயிலிருந்து பல் துறை அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்