மின்விபத்து அபாயம்

Update: 2023-09-27 12:22 GMT
நெல்லை அருகே சிவந்திபட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் சுடுகாடு அருகில் சாலையோரமாக உள்ள மின்கம்பத்தைச் சுற்றிலும் செடிகள், கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. மின்கம்பத்தின் உச்சி வரையிலும் பின்னிப்பிணைந்து வளர்ந்த கொடிகள், தாங்கு கம்பியிலும் படர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஆக்கிரமித்த கொடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்