மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2023-09-27 11:08 GMT
தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலம் ஊராட்சி, பாளையத்தானூர் பஸ் நிறுத்த பகுதியில் சாலையை அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பங்களை பெயர்த்து எடுத்து மீண்டும் நட்டனர். இதில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்தது. அந்தக் கம்பம் நடப்பட்டு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் சேதமடைந்த மின்கம்பம் நடப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த கம்பத்தை மாற்றிவிட்டு வேறு மின்கம்பத்தை அந்த பகுதியில் நட்டு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்