தெருவிளக்குகள் தேவை

Update: 2023-09-24 11:19 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடளான்கோவில் வட்டம் மதினா நகர் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பெண்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்