பண்ருட்டி தாலுகா நடுக்குப்பம் கிராமத்தில் தினசரி அதிக அளவில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள முக்கிய மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தொடர் மின்தடைக்கான காரணத்தை கண்டறிந்து, சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.