பழுதடைந்த தானியங்கி சிக்னல்கள்

Update: 2025-10-05 19:27 GMT

வேலூர்-திருவண்ணாமலை சாலையில் கணியம்பாடி கணவாய் அமைந்துள்ளது. இந்தக் கணவாய் மலைப்பகுதி வழியாக வேலூரில் இருந்து, திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு, கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், மதுரை, திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கிறது. மலைப்பாதையில் வளைவு பகுதி உள்ளதால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. அந்தச் சிக்னல் திடீரென இயங்கவில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்ஜித்குமார், கணியம்பாடி.

மேலும் செய்திகள்