திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எச்சூர் ஊராட்சியில் உள்ள மலை வையாவூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு போவோர் வந்து செல்கின்றனர். விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் நடமாட அச்சப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-முரளிதரன், சமூக ஆர்வலர், எச்சூர்.