சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-10-26 11:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மிகக் குறைந்த உயரத்தில் செல்வதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து செல்லும் டிராக்டர் மற்றும் லாரிகள் எந்த நேரத்திலும் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட மின் வாரியத்துைை ஊழியர்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.

-ராகவன், மகேந்திரவாடி.

மேலும் செய்திகள்