எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-27 06:13 GMT



திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா வந்தவாசி- காஞ்சீபுரம், செய்யார் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள மாங்கால் கூட்ரோட்டல் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக எரியாத உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்