தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே சீனிவாசன் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். மேலும், மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?