எரியாத தெருவிளக்கு

Update: 2022-07-08 12:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் கடந்த 3 வாரங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்ல பெண்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் தெரியப்படுத்தியும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு விளக்கை சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்