சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2022-07-27 12:47 GMT

விருதுநகர் மாவட்டம் மாரனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட யாதவர் தெரு, கிழக்கு தெரு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் கவனக்குறைவினால் மின்கம்பத்தின் மீது மோதி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மேலும் செய்திகள்