சுற்றுலா பயணிகள் அச்சம்

Update: 2023-08-09 17:03 GMT

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அணை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பூங்கா பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பூங்காவை விட்டு வெளியேறும் நிலை தொடர்கிறது. எனவே மின்விளக்குகள் போதிய அளவில் எரியச்செய்ய வேண்டும் என்பதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்