உயர் கோபுர மின் விளக்கு ஒளிருமா?

Update: 2023-05-14 11:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் உயர்மின்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் வெளிச்சம் இன்றி அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்