சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-02-15 17:25 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் உள்ள சமுதாய கூடத்தின் வடபுறம் மேல நாகமங்கலத்திற்கு செல்லும் சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து சற்று சாய்ந்த நிலையில் ஒடிந்து கீழே விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பியானது தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியே லாரி, வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி விட்டு மின் கம்பியை உயரே இழுத்து கட்டுமாறு மணிகண்டம் மின்வாரிய அலுவலக அலுவலர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அது பற்றிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நாகமங்கலத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி மின் கம்பிகளை உயரே இழுத்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்