ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-01-29 16:54 GMT

அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் உயரத்தை கூட்டுவதற்காக தனியாக இரும்பினாலான சேனல் அமைக்கப்பட்டது. தற்போது இரும்பிலான சேனல் சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. இது சாய்ந்து விழுந்தால் அந்த பகுதியில் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்