விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.