புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்

Update: 2022-12-18 12:57 GMT

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் உடையார்தெருவிற்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்