ஆபத்தான மின்மாற்றி சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-20 10:00 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி-திருவாசல் செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள மின்மாற்றியில் மின்கம்பங்கள் இரண்டும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்