வயல்வெளிபகுதியில் ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-09 10:42 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லூரி திருவாசல் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான வயல் வெளிகள் உள்ளன. இந்த வயல்வெளிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதால் மின்கம்பங்கள் விழுந்து விடுமோ? என்று அச்சத்தில் விவசாயிகள் வயலில் பணிகள் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்