மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் பஞ்சாயத்து, கொண்டல் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் சேதமடைந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை கடந்து செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்கவேண்டும்.