திறந்த நிலையில் மின்இணைப்பு பெட்டி

Update: 2022-08-23 11:07 GMT

கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அதன் அருகே கரிகாலன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்-சிறுமிகளுக்கான விளயைாட்டு உபகரணங்கள், ஊஞ்சல், சறுக்கு, நீர்த்தொட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பூங்காவில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து செல்கின்றனர். இந்த நிலையில் பூங்காவில் மின் வசதிக்காக தரையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. குறிப்பாக இணைப்பு பெட்டியில் இருந்து மின்வயர்கள் வெளியே நீண்டபடி உள்ளன. இதனால் பூங்காவுக்கு வருபவர்கள் குழந்தைகளை அச்சத்துடன் பூங்காவில் விளையாடவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை மூட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்