பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதிக்கு மின் வினியோகம் வழங்கும் வரகூரில் இருந்து கொளப்பாடி செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றியில் அடிக்கடி பழுதுஏற்பட்டு அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.