ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-22 12:05 GMT

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் கிராமத்தில் ஆட்டக்காரபண்ணையில் உள்ள பள்ளிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்