ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வடக்கு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் ஒரு மின்விளக்கு கூட இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிக்கு இரவு நேரங்களில் வர பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான மின்விளக்குகளை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.