அபாய நிலையில் மின்கம்பம்

Update: 2022-08-21 07:30 GMT
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா களக்காடு அருகே மூங்கிலடி கிராமம் தெற்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி மோதியதில் மின்கம்பம் பாதியாக உடைந்தது. பின்னர் அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் அந்த மின்கம்பத்துக்கு அடியே காங்கிரீட் போடப்படாமல் வெறுமனே மண்ணைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படாததால் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் செல்வதற்காக ஒரு குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழாயை இணைக்காமல் அப்படியே மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்