திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனியில் தெருவின் நடுவே 4 மின் கம்பங்கள் உள்ளன. இந்த வழியாக ரெயில் பயணிகளை ஏற்றி கொண்டு வரும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்துக்கு செல்கின்றன. தெருவின் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் வாகனங்கள் விலகி செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே மின்கம்பங்களை தெருவின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?