ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-08-16 11:21 GMT

பந்தலூர் அருகே அம்பலமூலா பஜாரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்தால் கூட தெரிவது இல்லை. மேலும் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குளை ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்