ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு போதிய அளவு இருக்கை வசதி இல்லை. இதனால் முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.