மதுரை மாவட்டம் 60 -வது வார்டு எல்லீஸ் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பெண்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.