எரியாத தெரு விளக்குகள்

Update: 2022-08-12 14:08 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூத்தூர் மேலத்தெருவில் உள்ள அரசு பள்ளி முதல் அரசு பெண்கள் விடுதி வரை அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பெண்கள், சிறுவர். சிறுமிகள் உள்பட பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்