மின்கம்பம் அகற்றப்பட்டது

Update: 2022-08-12 13:51 GMT

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வட்டகரை பாலத்திற்கு வடக்கு பகுதியில் ஒரு துணிக்கடை அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் ஆபத்தான நிலையில் நின்ற மின்கம்பத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்