உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2022-08-11 13:52 GMT

கரூர் மாவட்டம், கல்லடை ஊராட்சி, தோகைமலை-திருச்சி மெயின் ரோட்டில் கரையாம்பட்டி பிரிவு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின்கம்பம் எளிதில் முறிந்து விடும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்