பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே தேனம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.