ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்குத்தெருவில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அங்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகளை அமைக்க வேண்டும்.