பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி மின்கம்பத்தின் மீது மோதி காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.