மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நெடுமதுரை கிராமத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.