உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-08-02 15:13 GMT

பெரம்பலூர் -துறையூர் பிரதான சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரணாரை பிரிவு சாலை சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் 3 திசைகளிலும் இருந்து பிரதான சாலையை கடந்து செல்கின்றன. இப்பகுதியில் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களில் அரணாரை, நொச்சியம், புதுநடுவலூர், செல்லியம்பாளையம், மேட்டூர் ஆகிய கிராமப் புறபகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரம்பலூர் வந்துசெல்கின்றனர். அரணாரை பிரிவு சாலையில் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் போதிய வெளிச்சம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை தவிர்க்க அரணாரை பிரிவு சாலை அருகே உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்