தொடர் மின்தடையால் அவதி

Update: 2022-08-02 12:51 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விராதனூர், சந்தியாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள  தொழிற்சாலைகள், சிறு,குறு நிறுவனங்களின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய முடிவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்