தஞ்சை சாலைக்கார தெரு அருகே கடந்த சில மாதங்களுக்க முன்பு சாலை விரிவாக்க பணி நடந்தது. இந்த பணியின் போது சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியை சுற்றி தார்சாலை போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்மாற்றியின் ஒருபகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மின்மாற்றி சாலையில் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மேற்கண்ட பகுதியில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்மாற்றியை சாலையோரத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?