திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் பி.ஏ.கே.காலனி பூங்கா அருகே 4 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து கடந்த 2 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் தொல்லை இருப்பதால் மக்கள் இரவில் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்கை அகற்றிவிட்டு வேறு தெருவிளக்கை பொருத்தி நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும்.
-