பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் மின் விளக்குகள் முறையாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சாலையில் நடந்து செல்ல குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம்.