பழுதான மின்விளக்கு

Update: 2022-07-26 12:25 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் உள்ள பாண்டியன் நகர் 6-வது தெருவில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்குகள் சரியான முறையில் எரிவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பழுது சரி செய்யவில்லை. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்