மின்சார வசதி வேண்டும்

Update: 2023-09-20 11:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு பொது மருத்து வமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் உதவி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி மருத்துவமனை அருகில் உள்ள மின்மாற்றில் காகம் ஒன்று அடிபட்டத்தில் மருத்துவமனையில் உள்ள மின் மீட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தது. இதனை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மின்சாதன பொருட்களை சரிசெய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் போலீசார் மின் வசதிகள் இல்லாமல் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்