எரியாத உயர் கோபுரம் மின்விளக்கு

Update: 2023-09-17 11:30 GMT

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், தும்பலம் முசிறி-தா.பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வெள்ளாளப்பட்டி பிரிவு சாலையில் உயிர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்