விபத்து அபாயம்

Update: 2023-09-17 08:04 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு ஒயர்கள் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் இணைப்பு ஒயர்களை வாகனங்கள் இடையூறு இன்றி செல்லும் வகையில் உயரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக்மைதீன், திட்டுவிளை.

மேலும் செய்திகள்