எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-09-13 11:38 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் வழியாகச் செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்